அரக்கோணம் அரசு மருத்துவமனை சாலையில் வெள்ளநீர்
அரசு மருத்துவமனை சாலையில் வெள்ளநீர்;
அரக்கோணத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வரும் பிரதான வழியில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கால்வாய் நீரும் கலந்து வந்ததால், அந்த வழியாக சென்றவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் இங்குள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரும் கலந்து மழை நீருடன் ஓடியதை நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.