கம்பம் வடக்கு காவல் நிலைய போலீசார் நேற்று (மே.19) கம்பம் புதிய பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த காளிதாஸ் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 48 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காளிதாசை கைது செய்தனர்.