தேனி மாவட்டத்தில் உள்ள 7 அரசு பேருந்து பணிமனைகள் மூலம் மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பல பஸ்களில் டிஜிட்டல் பலகைகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் பல பஸ்களில போர்டுகள் செயல்பாடுகள் இன்றி முடங்கி உள்ளது. இதனால் பயணிகள் குழப்பம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்து டிஜிட்டல் போர்டுகளை பராமரிக்க உரிய நடவடிக்கை தேவை.