மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஜாதவ் சங்கர் - அருணா தம்பதியினர். இவர்கள் வேலைக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடியேறினர். அங்குள்ள தனியார் பள்ளியில் படித்த இவர்களது மகன் பிரணவ், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்றார். மராட்டிய மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர் தமிழ் பாடத்தில் 100க்கு 96 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.