உத்தமபாளையம், க.புதுப்பட்டியை சேர்ந்தவர் சென்றாயன். இவர் அதே பகுதி ராமர் என்பவரின் மருமகனுக்கு தனது மண்வெட்டியை கொடுத்துள்ளார். கொடுத்த மண்வெட்டியை கேட்க அவரது வீட்டிற்கு சென்ற நிலையில் ராமருக்கும் சென்றாயனுக்கும் வாக்குவாதம் ஏற்படுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர் அவரது உறவினர் அழகர்சாமி ஆகியோர் சென்றாயானை தாக்கி மண்டையை உடைத்தனர். உத்தமபாளையம் போலீசார் இருவரையும் நேற்று (மே.24) கைது செய்தனர்.