வேலூரில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் மே 30-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது;
வேலூர் மாவட்டத்தில் மே மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வரும் மே 30-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.