பழனி ஆண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை!
பழனி ஆண்டவர் கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.;
வேலூர் சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் முருகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதையடுத்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகரை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.