திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் திருக்குறுங்குடி களக்காடு பகுதிகளான மேற்கு மலை தொடர்ச்சி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் அதிக அளவில் வெள்ளம் செல்கின்றது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் இன்றும் மழை வருவது போல் வானிலை காட்சியளிக்கிறது.