திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. தொடர்ந்து இன்று காலை முதலும் சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றிலும் நீர்வரத்து அதிக அளவு செல்கின்றது. இதன் காரணமாக கரையோரங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன் குளித்து மகிழ்கின்றனர்.