அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
மதுரை ஏழுமலை பகுதியில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டார்;
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி ஏழுமலை பேரூர் அதிமுக சார்பில் கிளை வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் ஆலோசனைக் கூட்டம் ஏழுமலை பேரூர் அதிமுக செயலாளர் வாசிமலை அவர்களின் ஏற்பாட்டில் ஏழுமலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று (மே.30) நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி ஒன்றிய கழகச் செயலாளர்கள் பிச்சை ராஜன் செல்லம்பட்டி.ராஜா உசிலம்பட்டி நகர கழகச் செயலாளர் பூமாராஜா கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜன் மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.