சமயநல்லூர் தாயும் மகளும் மாயம்

மதுரை சமயநல்லூர் அருகே தாயின் மகளும் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-05-31 06:11 GMT
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் நடுக்கோட்டை தெருவை சேர்ந்த ஜெயராமனின் மனைவி வேலம்மாள் (36) மற்றும் 2 வயது மகள் ஆகிய இருவரும் கடந்த 27ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவர்களை தேடியும் கிடைக்கவில்லை என்பதால் ஜெயராமன் நேற்று (மே.30) சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாயையும் மகளையும் தேடி வருகின்றனர்.

Similar News