மின்னல் வேகத்தில் வந்த கார் தடுமாறி இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதால் பரபரப்பு
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர்;
ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அலுலகம் செல்லும் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கார் தடுமாறி இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியதால் பரபரப்பு ஊட்டி மாவட்ட ஆட்சியர் அலுலகம் செல்லும் சாலையி இன்று மாலை ஏற்பட்ட விபத்து, பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மின்னல் வேகத்தில் வந்த ஒரு கார், திடீரென நிலை தடுமாறி, எதிரே நின்று இருந்த இரு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. கார் அதிக வேகத்தில் வந்ததாக தெரிகிறது. கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. சாலை ஒதுக்கில் மேடு/சாய்வு இருந்ததால் நிலை தடுமாறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்தது