ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்;
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டியை ஊர் நாட்டாமை சவரிமுத்து தலைமையிலானோர் எங்கள் ஊரில் சிலர் சட்டத்துக்கு புறம்பாக புறம்போக்கு நிலத்தை கற்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்து வருவதால் எங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்து வருகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.