திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பரவலாக மழை பெய்ததின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது நீர்வரத்து குறைந்துள்ளதால் 10 நாட்களுக்குப் பின்பு இன்று (ஜூன் 5) மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.