ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டையில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் மேளா!;

Update: 2025-06-07 07:35 GMT
ராணிப்பேட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் மேளா மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புக்களை கொண்டு நாளை மறுநாள் 9-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்படுகிறது. தகுதியுடைய ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் தொழிற்பழகுனர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயன் பெறலாம். மேலும், இது தொடர்பான விவரங்களை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை ranipetdsto@gmail.com F லிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News