சங்கரன்கோவில் அருகே வாலிபர் பூச்சி மருந்து குடித்து பலி
வாலிபர் பூச்சி மருந்து குடித்து பலி;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிலமுத்து (19) என்ற வாலிபர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி நிலையில் உள்ளார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாலிபரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சேந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.