நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகில் உள்ள செங்குளம் பேருந்து நிலையம் பகுதியில் மாதந்தோறும் துப்புரவு செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் துப்புரவு செய்யும் குப்பைகளை சாலை ஓரத்தில் வைத்து, தீ வைத்து எரிப்பதால், புகையானது சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.