திருவெண்ணைநல்லூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

Update: 2025-06-18 16:34 GMT
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரப்பன், 60; நல்லதம்பி, 55; இருவரும் நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் மொபட்டில் பேரங்கியூரிலிருந்து வளையாம்பட்டு செல்வதற்காக பேரங்கியூர் கூட்ரோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடந்தனர். மொபட்டை நல்லதம்பி ஓட்டினார். அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. இதில், வீரப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லதம்பி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருவெண்ணெய்நல்லுார் விசாரித்து வருகின்றனர்.

Similar News