மரக்காணம் அருகே கரை ஒதிங்கிய பெண்ணின் சடலம்

மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை;

Update: 2025-06-18 16:35 GMT
மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை மீனவ கிராமம் கடற்கரையில் 50 வயது மதிக்கதக்க பெண் சடலம் நேற்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் பிரேதத்தை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த பெண் யார் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News