தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2025-06-19 13:26 GMT
குமாரபாளையத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், கால பைரவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், கள்ளிப்பாளையம் சிவன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் காலபைரவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Similar News