குரு பகவானுக்கு சிறப்பு பூஜை
தட்சிணாமூர்த்திக்கு வாசனை திரவியங்கள் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர் சிவன் கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர் நகரம் அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜூன் 19) ஆனி மாத வியாழக்கிழமை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு வாசனை திரவியங்கள் பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அரங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.