அர்சர்குளம்: சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர் கைது!

குற்றச் செய்திகள்;

Update: 2025-06-23 05:31 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் பூமராஜ் (55). இவர் மங்களநாட்டில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாகுடி போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 27 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

Similar News