படைவெட்டிய்ம்மனுக்கு சர்வ அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை..
எண்-3.குமாரபாளையம் படைவெட்டிய்ம்மனுக்கு சர்வ அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜை..;
நாமக்கல் மாவட்டம் எண்-3 குமாரபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டியம்மன் திருக்கோவில் உள்ளது.இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்கள் மற்றும் பௌர்ணமி அமாவாசை போன்ற நாட்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெறும். அதன்படி இன்று ஆனி மாத சர்வ அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று பின்னர் வெள்ளி சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.