மதுரையில் புதிய கண் சிகிச்சை மருத்துவமனை
மதுரை குட்ஷெட் தெருவில் புதிய கண் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.;
மதுரை குட்ஷெட் தெருவில் எம் எம் எம் கண் பராமரிப்பு மையம் இன்று (ஜூன்.28) திறக்கப்பட்டுள்ளது. இது எளிதாகவும், குறைவான செலவில் கண் பராமரிப்பை வழங்கும் முன்னோடியான ஒரு முறையை அறிமுகப்படுத்துகிறது. தென் தமிழகத்தில் முதன்முறையாக, இந்த மையம் முழுமையாக வீட்டுப் பரிசோதனைகளையும், சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனைகளையும், நவீன ஃபண்டஸ் கேமராவை வீட்டிற்கே கொண்டு வந்து மேற்கொள்கிறது. மேலும், சிறந்த தரம் கொண்ட இந்திய உற்பத்தி லென்ஸ்களுடன் அறுவை சிகிச்சை குறைந்த செலவில் வழங்கப்படுகின்றன. இது கிராமப்புறத்தில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் 82485 64103 என்ற எண்ணை அழைத்து வீட்டிலேயே சிகிச்சை பெறலாம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். அவருடன், மத்திய அரசு சட்ட ஆலோசகர் டாக்டர் பி. ராமசாமி மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லூரி தலைவர் பி. அண்ணாதுரை ஸ்ரீ, தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் கருவிழி சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். பெர்னார்ட் ஆல்பர்ட் ராஜ்குமார், கண் மருத்துவர் டாக்டர் ஆ. பாக்ய சகாய மெர்சி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது எம் எம் எம் கண் பரிசோதனை மையம் மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லூரி இணைந்து அதில் பயின்றுவரும் பட்டதாரி மாணவர்கள் கிராமப்புற மற்றும் அருகிலுள்ள சிறிய நகர்ப்புறங்களில் தங்கள் சொந்தக் கண் பரிசோதனை மையங்களை தொடங்கும் வாய்ப்பு பெறும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டாக்டர் எஸ். பெர்னார்ட் ஆல்பர்ட் ராஜ்குமார் கூறியதாவது: “நாங்கள் மதுரையில் எங்கள் கண் பராமரிப்பு சேவையை தொடங்குவதில் பெருமை கொள்கிறோம். எங்களது சிகிச்சை முறை முழுமையாக வீட்டுப் பரிசோதனைகள் மற்றும் சமூக நல முகாம்களை நோக்கமாக கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு நீரிழிவு விழித்திரை நோய் (diabetic retinopathy) மற்றும் கண் அழுத்தம் (glaucoma) போன்றவை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற முன்னெச்சரிக்கையான பரிசோதனைகள் கண் பார்வை இழப்பை தவிர்க்க உதவும். இப்போது எம் எம் எம் கண் பராமரிப்பு மையம் மட்டுமே ஃபண்டஸ் கேமரா தொழில்நுட்பத்த்தை வீடுகளுக்கே எடுத்து சென்று பரிசோதனைகள் மற்றும் முகாம்களை நடத்தி வருவதாக தெரிவித்தார். மூத்த குடிமக்கள், அவசர சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வர இயலாதவர்களுக்கு இது ஒரு பேருதவியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். ஃபண்டஸ் கேமரா மூலம் கண் கருவிழிதிரையை 360 டிகிரி கோணத்தில் காண முடியும். இது கண்ணில் உள்ள கோளாறுகளை மிகச்சரியாக கண்டறிய உதவுகிறது. டாக்டர் ஆ. பாக்ய சகாய மெர்சி கூறியதாவது: “எங்கள் மருத்துவமனை, ஊசி, தையல் இல்லாத கண்புரை சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்றது. குறைந்த செலவில் மருத்துவமனையில் தங்கவேண்டிய தேவையை தவிர்ந்து வெளிநோயாளிகளாகவே சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு செல்ல வாகன ஏற்பாடும் செய்துதருகிறேம். இந்தச் சிகிச்சைகள் கிராமப்புற மக்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதார உதவியாக இருக்கின்றன என்று கூறினார்.