மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி!
மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். டிரைவரான இவர், கடந்த 22ஆம் தேதி தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்து கொண்டிருந்தார். அப்போது மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தது படுகாயமடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில்,அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.