பைக் விபத்தில் துறைமுக ஊழியர்பலி!
தூத்துக்குடி துறைமுக சாலையில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பரிதாபமாக பலியானார்;
தூத்துக்குடி துறைமுக சாலையில் பைக் விபத்தில் துறைமுக ஊழியர் பரிதாபமாக பலி தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரைச் சேர்ந்தவர் முனியாண்டி (58). இவருக்கு நாகவல்லி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மோட்டார் பைக்கில் புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் டோல்கேட் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.