அரசு மருத்துவமனை எதிரே ஆண் சடலம் மீட்பு

மதுரை அரசு மருத்துவமனை எதிரே உள்ள பிளாட்பாரத்தில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.;

Update: 2025-07-01 04:09 GMT
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை எதிரே நேற்று இரவு 7 மணி அளவில் துப்புரவு பணி மேற்பார்வையாளர் பாண்டி என்பவர் அப்பகுதியில் பணியில் இருந்த போது நடைபாதையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உயிரிழந்து கிடப்பதை அறிந்தார். இதுகுறித்து அவர் மதிச்சியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News