கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடக்கம்

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜை நேற்று மாலை தொடங்கியது;

Update: 2025-07-05 03:30 GMT
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நேற்று (ஜூலை .4) மாலை பூர்வாங்க பூஜை திருவாட்சி மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் புனித நீர் அடங்கிய குடம் அலங்கரித்து வைக்கப்பட்டது. மங்கள இசையுடன் துவங்கி யஜமான சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை முடிந்து புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அனுமதி பெறுதல் முடிந்து அனைத்து மூலவர்களுக்கும் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. ஜூலை 10 முதல் யாக சாலை பூஜை தொடங்குகிறது. இந்நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மத்தேவன், ராமையா, துணை கமிஷனர் சூர்யநாராயணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Similar News