வத்திராயிருப்பில் மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..*
வத்திராயிருப்பில் மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது..*;
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் மது போதையில் தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மறவர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணமூர்த்தி (57). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி புஷ்பவல்லி (50).இவர்களுக்கு பாலசுந்தரம் அஜித் குமார் (25) திவ்ய பாரதி (20) மகன், மகள் உள்ளனர் .பாலசுந்தரம் அஜித்குமார் ஐடிஐ முடித்துள்ளார் இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு பொழுதை கழித்து வந்துள்ளார். இதில் கொலையான பாலகிருஷ்ண மூர்த்தி மகள் திவ்யபாரதி சுரைக்காய்பட்டியில் உள்ள தனது பாட்டி ராமலக்ஷ்மி வீட்டிலிருந்து சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் பி சி ஏ படிப்பு படித்து முடித்துள்ளார்.கடந்த 20 நாட்களுக்கு முன்பு புஷ்பவல்லிக்கும் பாலசுந்தரம் அஜித் குமாருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலகிருஷ்ண மூர்த்தி மது போதையில் இருந்த பாலசுந்தரம் அஜித்குமார் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த பாலசுந்தரம் அஜித்குமார் தனது தந்தையான பாலகிருஷ்ண மூர்த்தியை அரிவாளால் சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிள்ளார்.இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் இருந்தவர்கள் பார்த்து வத்திராயிருப்பு போலீஸருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, கொலையான பாலகிருஷ்ண மூர்த்தியின் உடலை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விருதுநகரில் இருந்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வருகை தந்து சோதனை மேற்கொண்டனர். மது போதையில் தந்தையை கொலை செய்த பாலசுந்தரம் அஜித் குமாரை போலீசார் கைது செய்தனர்.தந்தையை மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் வத்திராயிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மது கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் அதிக அளவில் குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.