சீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலயத்தில் சிறப்பு பூஜை!
அருள்மிகு சீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது.;
வேலூர் அடுத்த அரியூர் கார்த்திக் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீரடி ஸ்ரீ அக்ஷயபாபா ஆலயத்தில் சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இதில், சிறப்பு பூஜைகளும் வேள்விகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.