கோவை: கவி அருவி மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு
கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கவி அருவி, தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தது. நீர்வரத்து தற்போது சீரானதால், மீண்டும் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கியுள்ளது. வார விடுமுறை நாளானதால் ஏராளமானோர் வந்து குளித்து மகிழ்ந்தனர்.