மத்தூர்: கால்நடை மருத்துவமனை சுற்றியுள்ள புதர்களை அகற்ற கோரிக்கை
மத்தூர்:கால்நடை மருத்துவமனை சுற்றியுள்ள புதர்களை அகற்ற கோரிக்கை;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் அடுத்த பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் வளர்க்கும் கால் படைகளுக்கு நோய் வாய் படும் போதும் தடுபூசி போடுவதற்கும் இந்த மருத்துவ மனைக்கு விவசாயிகள் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடை மருத்துவமனை சுற்றிலும் பராமரிப்பின்றி புதர் மண்டி உள்ளது.கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வரும் விவசாயிகள் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று விவசாயிகளின் எதிர்பார்பாக உள்ளது.