கடலூர்: சதமடித்த வெயிலால் மக்கள் அவதி
கடலூர் பகுதியில் சதமடித்த வெயிலால் மக்கள் அவதி அடைந்தனர்.;
கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று (ஜூலை 8) கடலூர் பகுதியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் கடலூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.