ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு!

தனி மனைகள் வரன்முறைக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம்;

Update: 2025-07-12 02:07 GMT
2025-26-ம் ஆண்டுக்கான சட்டசபை மானியக் கோரிக்கையின் போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், முன்பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசா ணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.6.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 15.5.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித் துறை அரசாணை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட் டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள்,www.tcponline.tn.gov.in ணப்பங்களை பதிவு செய்யலாம்.இதுபோன்று, மலையிடப்பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங் களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 30.11.2025 வரை www.tcponline.tn.gov.in தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News