வாடகை வீட்டில் குட்கா குடோன்

குடோன்;

Update: 2025-07-12 04:17 GMT
சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மனைவி சந்திரலேகா, 33; என்பவர், நின்னையூரை சேர்ந்த பொன்னுசாமி மகன் பரசுராமன், 29; என்பவரது கட்டடத்தை வாடகைக்கு எடுத்து மூட்டை மூட்டையாக குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், உளுந்துார்பேட்டை அடுத்த பாளையகுஞ்சரம் பகுதியை சேர்ந்த ஷேக்தாவூத் மகன் ஷேக்ஜாபர்,36; என்பவர், சங்கராபுரம் வீட்டில் இருந்து ஆட்டோக்கள் மூலம் குட்கா பொருட்களை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று டெலிவரி செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பூமா தேவி, பரசுராமன், சந்திரலேகா மற்றும் ஷேக்ஜாபர்ஆகிய 4 பேரையும் வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர். நால்வரிடம் இருந்து, ரூ. 1.14 லட்சம் மதிப்புள்ள, 144 கிலோ 600 கிராம் எடை கொண்ட ஹான்ஸ், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களையும், ஒரு ஆட்டோவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News