உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் அமைச்சர் பங்கேற்பு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் அமைச்சர் பங்கேற்பு;
தமிழ்நாடு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் கழகப் பொருளாளர், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா, அரசு அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.