புளியங்கண்ணு கிராமத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
புளியங்கண்ணு கிராமத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை;
புளியங்கண்ணு கிராமம் திருவள்ளுவர் நகர் பவானி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரியா (வயது 25). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்த பிரியா வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.