கணவர் மாயம். மனைவி புகார்

மதுரை திருமங்கலத்தில் கணவர் மாயம் என்று மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2025-07-21 05:16 GMT
மதுரை திருமங்கலம் அன்னகாமு தோட்டம் ராஜாஜி 1வது தெருவில் வசிக்கும் சேகரின் மகன் அழகு ராஜன்( 36) என்பவர் கடந்த 9ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஜூலை .20)அவரது மனைவி தேவி பிரியா திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.

Similar News