ஓசூர்: பேருந்தில் இளம்பெண்ணை புகைப்படம் எடுத்தவர் மீது வழக்கு.
ஓசூர்: பேருந்தில் இளம்பெண்ணை புகைப்படம் எடுத்தவர் மீது வழக்கு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 23 வயது இளம் பெண். இவர், மதுரையிலிருந்து ஓசூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் கந்திகுப்பத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (32) என்ற தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு அந்த பேருந்தில் பயணம் செய்துள்ளார். அவர் அந்த பெண்ணை தனது செல்போனில் புகைப்படம் எடுத்தாக கூறப்படுகிறது.இது தொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.