வீட்டில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்
திண்டுக்கல்லில் வீட்டில் பிடித்த தீயை போராடி அணைத்தனர்;
திண்டுக்கல், NGO-காலனி ஓடையூர் ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள சந்தனம் - பொன்னம்மாள் என்பவரது வீட்டில் தீப்பிடித்து எரிவதாக திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திண்டுக்கல் தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.