கருவேல மரங்களுக்கு தீ வைத்த ஒப்பந்ததாரர் - பொதுமக்கள் அவதி

சிவகங்கை அருகே கருவேல மரங்களுக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்;

Update: 2025-07-31 11:53 GMT
சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் குடியிருப்பு அருகே உள்ள ஊரணியில், கருவேலம் மரங்களை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அகற்றப்பட்ட மரங்களின் காய்ந்த சருகுகளை ஊரணிக்குள் சேகரித்து வைத்திருந்தனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர்கள் இதை அகற்றமல் சருகுகளுக்கு தீ வைத்ததால், தீ 15 அடிக்கு மேல் எழுந்து பரவி வருகிறது. தீயின் காரணமாக கரும்புகை கிளம்பி, அருகிலுள்ள குடியிருப்புகளில் கண் எரிச்சல், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்

Similar News