கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை;
திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் மணிகண்டன்(38) என்பவர் குடும்பப் பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் நைலான் கையிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்