ஊத்தங்கரை: எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு.

ஊத்தங்கரை: எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு.;

Update: 2025-08-02 01:34 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள காரப்பட்டு பகுதியில், எலக்ட்ரிக்கல், ஹார்ட்வேர்ஸ் கடையை நடத்தி வருபவர் சிவஞானம்(48) நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த, ரூ. 70 ஆயிரம் 8 கிராம் தங்க காசு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பல பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து புகாரில் பேரில் ஊத்தங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News