நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் அருகே உள்ள டார்லிங் நகர் கிழக்கு பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள சர்வதேச உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்திய இறகு பந்து கழக செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு இறகு பந்து கழக பொதுச்செயலாளர் அருணாச்சலம் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.