ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..*
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய நபர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ்பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 9 தேதி மருத்துவமனையில் பணி முடிந்து திரும்பிய பொழுது திடீரென வந்த ராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிகணேஷ் ( 31) என்பவர் மருத்துவர் ரமேஷ் பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அவருக்கு மூன்று இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர். விசாரணையில் கத்தியால் குத்திய நபர் ராஜபாளையம் ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிய கணேஷ் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணிபுரிந்தவர் என்பது மருத்துவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகவும் கூறப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்த மருத்துவரை ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாண்டி கணேஷ் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ்,விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா,நகர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் பரிந்துரையின் பெயரில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பாண்டி கணேசை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.