ஒசூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த கலெக்டர்.
ஒசூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்த கலெக்டர்.;
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" மருத்துவ முகாமை இன்று துவக்கி வைத்தார். ஒசூர் மாநகராட்சி காமராஜ் காலனி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், ஓசூர் மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பார்வையிட்டனர். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் முகம்மது ஷபீர் ஆலம், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.