உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.;
தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழாவை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் இன்று தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் இன்று தொடங்கி வைத்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் தாய்ப்பால் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். இவ்விழாவில் அரசு செயலர், சமூக நலத்துறை ஜெயஸ்ரீ முரளீதரன் விழா பேருரையும், இயக்குனர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மெர்சி ரம்யா விழாவின் சிறப்புரையும் ஆற்றினார். சமூக நலத்துறை ஆணையர் சங்கீதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் கு.சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, மாநகராட்சி ஆணையாளர் பானோத் ம்ருகேந்தர் லால், கோட்டாட்சியர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.