தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு.
தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு.;
உலக தாய்ப்பால் வாரம் 2025 ஆகஸ்ட் 1 முதல் 7-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஒசூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை ஒசூர் நகராட்சி நகர நல அலுவலர் மருத்துவர் அஜித்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.