திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இன்று (ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கை முன்னிட்டும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் காரணமாக ஆற்று பாலங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.