சூளகிரி அருகே டூவீலர்கள் மோதல்- காய்கறி வியாபாரி உயிரிழப்பு.

சூளகிரி அருகே டூவீலர்கள் மோதல்- காய்கறி வியாபாரி உயிரிழப்பு.;

Update: 2025-08-04 00:55 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள பீரேபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (22) காய்கறி வியாபாரியான. இவர் கடந்த 1-ஆம் தேதி அன்று டூவீலரில் சூளகிரி கும்பளம் சாலை தொட்டூர் சாய்பாபா கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக வேரோறு டூவீலர் வந்த நபர் சரவணனின் டூவீலர் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Similar News